torsdag 9. mai 2013

பொதுவாய அரச தலைவர்கள் மகாநாடு




இலங்கையில் நடைபெற விருக்கும்நல பொதுவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மாகாராணி சார்பில், இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொள்வார் என பொது நலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அறிவித்துள்ளார். நீண்டதூரம் பயணம் செய் வதைத் தவிர்க்கும் நோக்கில் பிரித்தானிய மகாராணி எடுத் திருக்கும் இத்தீர்மானத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இளவரசர் சார்ள்சை வரவேற்பதாக கமலேஷ் சர்மா விடுத்திருக்கும் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய மகாராணியின் வைர விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ் வுகளில் மகாராணியைப் பிரதிநிதித் துவப் படுத்தி அரச குடும்பத் தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமையையும் கமலேஷ் சர்மா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி யுள்ளார்.
வைகாசி 08, 2013

நன்றி-சூத்திரம்http://www.sooddram.com/

onsdag 8. mai 2013

கீதாசார தர்மப்போர்





பிரபாகரன் நடத்தியது கீதாசார தர்மப்போர்; சிங்களப் பேராசிரியர் தெரிவிப்பு

இலங்கை வரலாற்றில் எந்தவொரு போரும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவில்லையென ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல்துறை பீட பேராசிரியர் ரி.ஜீ.குலதுங்க தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற தொல்பொருளியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராசிரியர் குலதுங்க, "பிரபாகரன் போரில் ஈடுபட்டது பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டுதான்'' என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வரலாற்றை எடுத்துக்கொண்டால், நடந்த போர் நிச்சயமாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்திருக்காது. அது மதத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்திருக்கிறது.

துட்டகைமுனுவின் போர் கூட இனவாதத்தின் அடிப்படையில்தான் நடத்தப்பட்டதாக கடந்த பல காலங்களில் கூறப்பட்டன. ஆனால் எந்தவொரு நூலிலும், ஆவணத்திலும் எல்லாளனுக்கும், துட்டகைமுனுவுக்கும் இடையிலான போர் இனவாதத்தின் அடிப்படையில் நடந்ததென்று குறிப்பிடப்படவில்லை.

எல்லாள மன்னனைப் பற்றி மகாவம்சத்தில் 23 விதந்துரைகள் இருக்கின்றன. அதில் முதலாவது மற்றும் இறுதி விதந்துரைகளைத் தவிர ஏனைய எல்லாவற்றிலும் அவரைப்பற்றி நன்றாகத்தான் சொல்லப்பட்டுள்ளது.

நமது நாட்டைப் பொறுத்தவரை கலாசாரம்கூட இந்தியக் கலாசாரத்தையே அடியொற்றி வந்திருக்கிறது. எமது நாட்டில் போரில் ஈடுபட்ட பிரபாகரன் கூட இந்திய நூலான பகவத்கீதையின் பல விடயங்களை அடியொற்றித்தான்
அதில் குதித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் குலதுங்க

நன்றி-உதயன்http://www.lankasri.com/ta/link-33e6C332RS.html

søndag 17. mars 2013

தமிழீழம்



தமிழீழம் ஒன்றே தீர்வு என்ற முழக்கத்தை முன்வைத்து சென்னை தமிழர் கடற்கரையில் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது.

தமிழீழம் அமைய போராடும் மாணவர்களுக்காகவும் , தமிழீழம் அமைய இலங்கையின் மீது சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தியும் , ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு கோரியும் இந்த ஒன்று கூடல் நடைபெற்றது.

இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பெரும்திரளாக கலந்து கொண்டு தங்கள் தமிழ் ஈழத்திற்கான தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அனைவரும் தமிழீழமே ஒரே தீர்வு என்ற முழக்கத்தை முன்வைத்தனர்.

இலங்கையில் நடந்தது போற்குற்றமல்ல , அது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என்ற செய்தியை அழுத்தமாக பதிவு செய்தனர். இந்த நிகழ்விற்கு பீகாரில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் திரு சோம் பிரகாஷ் வருகை தந்திருந்தார்.

இவர் ராஜக்பக்சே பீகார் வந்த போது அவருக்கு எதிராக கறுப்புக் கொடி ஏந்தி முழக்கமிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு பழ நெடுமாறன் , திரு வைகோ போன்ற தலைவர்கள் இந்த கூட்டத்திற்கு வந்து சிறப்புரை ஆற்றினர்.

அனைவரும் தமிழீழமே ஒரே தீர்வு என்று விண்ணதிர முழக்கமிட்டனர்.

ஐநா வில் அமெரிக்க கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் நகலை மாணவர்கள்
தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

நன்றி -jvpnews

tirsdag 5. mars 2013

காணாமல் போனோர் உறவுகள்


எம்மிடமிருந்து பறித்த எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள் - மழைக்கு மத்தியில் மெழுவர்த்தி ஏந்தி மக்கள் போராட்டம்

"எங்களிடமிருந்து பறித்த எங்கள் குழந்தைகளை எங்களிடம் தாருங்கள்" என்று கொட்டும் மழையில் மத்தியில் மெழுகு வர்த்தி ஏந்தி,  நெஞ்சம் கனக்க மக்கள் போராட்டம் ஒன்று வவுனியா நகர சபையின் வாசலில் இடம்பெற்றுக்  கொண்டிருக்கிறது. 

வடக்கு -கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரி வடக்கு மாகாணத்தில்போ காணாமல் போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்ட நிகழ்வு நாளை காலை 9 மணியளவில் கொழும்பு - விகாரமா தேவி பூங்காவில் நடாத்தப்பட்டு, பொது நூலகத்தில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், கூட்டத்தின் மூடிவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்றினைக் கையளிப்பதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆர்பாட்டத்தில் பங்குபற்றுவதற்காக வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி 12 பஸ் வண்டிகளில் புறப்பட இருந்த பொதுமக்களை தொடர்ந்து பயணிக்க அநுமதிக்க முடியாது எனத் தெரிவித்து - பொலீஸ் ட்ரக் வண்டியை வீதியின் குறுக்கே நிறுத்தி பொலீசார் தடுத்து வைத்ததனைத் தொடர்ந்து வீதியில் மெழுவர்த்திகளை ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர

"எங்களிடமிருந்து பறித்த எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள்", "ஏதுமறியா எங்கள் பாலகர்கள் எங்கே?", "கவறு இருந்தால் நிரூபியுங்கள் இல்லையேல் விடுதலை செய்யுங்கள்" போன்ற கோசங்களை வானதிரக் கத்தியவாறு மழைக்கு மத்தியிலும் - நடுவீதியில் கண்ணீர்மல்க உறவுகளைத் தவறிவிட்டவர்கள் கோசங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
நன்றி- உதயன்


lørdag 23. februar 2013

பாலச்சந்திரன்




விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் உயிரோடு பிடிக்கப்பட்டு, இராணுவப் பதுங்குகுழி போன்று காட்சியளிக்கும் ஓர் இடத்தில் உண்ணக்கொடுத்து, பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்கான புதிய ஆதாரங்களாக தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.
பிரபாகரனின் இளைய மகனின் புகைப்படங்கள் மட்டுமன்றி, நெஞ்சை அதிரவைக்கும் இன்னும் பல ஆதாரங்கள் தம்மிடம் இருக்கின்றன என சனல்4                                 தொலைக்காட்சியின் இயக்குநர் கல்லும் மக்ரே தெரிவித்துள்ள நிலையில், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெஸர்கி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய விடியோவையும், அது தொடர்பான தகவல்களையும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தமது கவனத்தில் கொண்டுள்ளார் என மார்ட்டின் நெஸர்கி தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைக்கப்பட் தேசிய முன்னெடுப்புகள், நேர்மை ஆகியவற்றினூடாகப் பொறுப்புக்கூறும் கடமையை இலங்கை மேற்கொள்ளவேண்டியதன் முக்கியத்துவத்தை இடைவிடாமல் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தி வருகின்றார் என்றும் அவரின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்
.
பிரபாகரனின் இளைய புதல்வர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் இராணுவப் பதுங்குகுழிக்குள் அமர்ந்து பிஸ்கட் சாப்பிடும் சம்பவத்தைக் கொண்ட விடியோ குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஐ.நா. கவனத்தில் எடுத்துக்கொண்ட விடயத்தை நெஸர்கி தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய திகிலூட்டும் இந்த விடியோ குறித்து இத்தருணத்தில் ஐ.நா. நேரடியாக எக்கருத்தையும் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். “பொறுப்புக்கூறும் கடமையை மேற்கொள்வதன் மூலம் தேசிய நல்லிணக்கப்பாட்டையும் இலங்கை தோற்றுவிக்க வேண்டும் என்றும் பான் கீ மூன் எதிர்பார்க்கின்றார் சமீபத்தில் வெளியிடப்பட்ட விடியோவையும், அது தொடர்பான தகவல்களையும் வெளிப்படையாகவே நாம் அறிவோம்.
எனினும், அது தொடர்பாக என்னிடம் திடமான கருத்து எதுவும் கிடையாது” என்றும் அவர் கூறியுள்ளார

கேள்வியொன்றுக்கு ஐ.நா. பேச்சாளர் பதிலளிக்கையில்
“இலங்கையில் நிலவிய யுத்த காலத்தில் ஐ.நா. விட்ட தவறுகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக பான் கீ மூனால் நிறுவப்பட்ட குழு இலங்கையில் நடைபெற்ற யுத்தகால சம்பவங்கள் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ளவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இது உள்ளகக் கடமைக்கான ஒரு குழு ஐ.நாவுக்குள் எவ்வாறு பரிந்துரைகளை முன்னெடுக்க முடியும் என்பதை ஆய்வதற்கான ஓர் அமைப்பு. அதனால் இலங்கையில் நடைபெற்ற உண்மையான சம்பவங்கள் குறித்து கருத்துச் செலுத்த முற்படவில்லை.
இவற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் சம்பந்தப்பட்டதே இரண்டாவது அறிக்கை”  என்றும் மார்ட்டின் நெஸர்கி விளக்கியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவா மாநாடு நெருங்கி வரும் சூழ்நிலையில், பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதற்கான புதிய போர்க்குற்ற ஆதாரங்களாக நெஞ்சை அதிர வைக்கும் புகைப்படங்களை சனல் 4 தொலைக்காட்சி இயக்குநரிடமிருந்து பெற்று லண்டனின் “த இன்டிபென்டென்ட்’ நாளேடு மற்றும் இந்தியாவின் “த இந்து’ நாளேடு என்பன வெளியிட்டிருந்தன.
இதையடுத்து, பாலச்சந்திரன் உயிருடன் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்பதையும் பின்னர் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதையும் இப்புகைப்படங்கள் தெளிவாகவே காட்டுகின்றன என சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டு,அரச த இலங்கை ரப்பின் மறுப்புக ை நிராகரித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.



மட்டக்களப்பு நகரம்



மட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ் நகரின் மத்தியிலுள்ள பிரதான மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்தின் வேலைகள் இன்று ஆரம்பமாகியன. அத்துடன் அந்த சுற்றுவட்டத்தில் இருந்த காந்தி சிலையும் அகற்றப்பட்டு பிரிதொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ்; நகரின் மத்தியில் உள்ள காந்தி சதுக்கம், காந்தி பூங்காவாக மாற்றம்பெறுகிறது. தேசத்தின் மகுடம் (தெயட்ட கிருள) வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த அபிவிருத்தி திட்டத்துக்கென 38.301 மில்ய் லியன் ரூபாஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன.
இதில், மட்டக்களப்பு மாநகர சபை 1.98 மில்லியன் ரூபாய்க்கு வீதி அபிவிருத்திக்கான வேலைகளையும் சிலைகள் நிறுவுதல், சுற்று வேலை அமைத்தல், கொங்கிறீற் இடுதல், புற்தரை அமைத்தல் உள்ளிட்ட வேலைகளை 36.31 மில்லியன் செலவில் நகர அபிவிருத்தி அதிகார சபையும் மேற்கொள்ளவுள்ளது.
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் நிறைவடையவுள்ளது.  2030 வரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மட்டக்களப்பு மாநகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், 28 இணைத்திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் முதலில் 7 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அதன்படி, மட்டக்களப்பு கோட்டை, விமான நிலையம், வெள்ளைப்பாலம், காந்தி சதுக்கம், வெபர் மைதானம், மட்டக்களப்பு வாயில் உள்ளிட்ட பகுதிகள்; புனரமைக்கப்படவுள்ளன. 
விமானநிலையமானது இரண்டு பில்லியன் செலவிலும், ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் மற்றும் 25 ஏக்கரில் 250 மில்லியன் செலவில் கைத்தொழில் பேட்டை,  மட்டக்களப்பு நகரிலுள்ள பாலங்கள் அகலமாக்கப்பட்டு 1.2 பில்லியன் செலவில் புனரமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டத்தின் போது மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்தில் உள்ள காந்தி சிலை அகற்றப்பட்டு அந்த சிலை பிரிதொரு இடத்தில் நிர்மாணிக்கப்படும் என்று மட்டக்களப்பு நாநகர சபை மேயர் சிவகீத்தா பிரபாகரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

நன்றி -உண்மைகள்

onsdag 20. februar 2013

பாலச்சந்திரன் கொலை


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் 2009 மே 19ஆம் திகதி நண்பகல் அளவில் கொல்லப்பட்டுள்ளதாக தடயவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

பதுங்குகுழி ஒன்றில் பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டுள்ளது மற்றும், அவர் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகள் அடங்கிய நான்கு ஒளிப்படங்களை வைத்து மேற்கொண்ட ஆய்வுகளிலேயே இது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒளிப்படங்களின் சுயதரவுகளின் படி, 2009 மே 19ஆம் திகதி காலை 10.14 மணிக்கும், 12.01 மணிக்கும் இடையில் ஒரே ஒளிப்படக் கருவியால் எடுக்கப்பட்டுள்ளன என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

எனவே, பாலச்சந்திரன் மே 19ஆம் திகதி நண்பகலுக்கு சற்று முன்னதாகவே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

இது கேள்விக்கிடமின்றி நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை என்று தாம் உறுதிப்படுத்துவதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

நன்றி-  உதயன்

onsdag 13. februar 2013

ஜெனீவா: போர் குற்ற விசாரணைகள்


ஐ.நா.வில் மனித உரிமை வல்லுநர்கள் குழு அறிக்கை!
தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

ஜெனீவா: போர் குற்ற விசாரணைகள் தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசு தவறிவிட்டதாக ஐ.நா. அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் பயணம் மேற்கொண்ட மனித உரிமை வல்லுநர்கள் குழு, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் கடந்த திங்கள் அன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை முழுமையாக  முடிக்கப்படாதவுடன், விசாரணை நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் நடக்கவில்லை என்பதை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 1972 முதல் 2009ஆம் ஆண்டு வரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஆண்டு மட்டும் சட்டவிரோத கொலைகள், கடத்தல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிமாகியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அறிக்கையில், தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதலும் இலங்கையில் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு மீது ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மற்றொரு கண்டன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வர உள்ள நிலையில்இந்த அறிக்கை முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.

நன்றி -தினகரன்

tirsdag 12. februar 2013

ஊனமுற்றோருக்கான கையேடு’


“ஊனமுற்றோருக்குத் தேவைப்படுவது அன்பும், ஆதரவும் மட்டுமல்ல; வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகாட்டுதலும்தான். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு தகவல் களஞ்சியம்தான் இந்தப் புத்தகம்” - ‘ஊனமுற்றோருக்கான கையேடு’ என்கிற இந்தப் புத்தகத்தின் அட்டையில் இருப்பது மேலே குறிப்பிட்ட வார்த்தைகள்தான்.

சத்தியமான உண்மை. ஊனமுற்றவர்களுக்கு பெரிதும் தேவை, அவர்கள் அந்த ஊனத்தை வெல்வதற்கான வழிகள்தானே தவிர நாம் காட்டும் பரிதாப உணர்ச்சிகள் அல்ல.. நம்மூரில் அட்வைஸிற்கும், அறிவுரைக்கும் பஞ்சமேயில்லை. ஆனால் வழி காட்டுதல் என்கிறபோதுதான் பாதிப் பேர் காணாமல் போய்விடுவார்கள்.

“ஒரு மீனை வாங்கிக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது சாலச்சிறந்தது” என்பார்கள். அது போலத்தான் நீங்கள் ஊனமுற்றவரை பார்த்து எத்தனை, எத்தனை வார்த்தைகளையும், வாக்கியங்களையும் கோர்த்து ஆறுதல் சொன்னாலும், அது வாழ்க்கையை அவர்கள் எதிர்கொள்ள சொல்லிக் கொடுக்கும் வழி காட்டுதலைப் போல வராது.

டாக்டர் சு.முத்துசெல்வக்குமார் எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகம் என்னைப் போன்ற தேடுதல் வேட்டையில் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்களுக்கு மிக பயனுள்ளதாகும். (அதனால்தான் விமர்சனங்களுக்கான புத்தக லிஸ்ட்டில் இப்புத்தகத்தையே முதலில் தேர்வு செய்திருந்தேன்).

ஊனத்தில் மிகப் பெரிய ஊனம் என்னைப் பொறுத்தவரை பார்வையிழப்புதான். அந்த இழப்பிற்கு எவ்வளவுதான் நஷ்டஈடு கொடுத்தாலும் அது தகாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த பார்வையற்றவர்கள் படிப்பதற்கான பிரெய்லி முறை பற்றியும், அதைப் பயிற்றுவிக்கும் முறைகள், நிறுவனங்களின் முகவரிகள் மற்றும் பயிற்சி முறைகள் பற்றி விலாவாரியாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

அரசு நிறுவனங்களில், அரசுப் பணிகளில் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு என்றும், அதற்கான வழிமுறைகளையும் வேலையில் இட ஒதுக்கீடு என்ற பிரிவின் கீழ் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

மறுவாழ்வு அளிக்கும் மையங்கள் செயல்படும் விதங்கள் பற்றியும், அதில் பயிற்சி பெறுவது எப்படி என்பது பற்றியும், அதன் இந்திய அளவிலான முகவரிகளைக் குறிப்பிட்டும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

ஊனமுற்றோருக்கு பள்ளிக் காலத்தில் இருந்தே உதவித் தொகைகள் வழங்கப்படுவது இன்றைய தேதிவரையில்கூட பலருக்கும் தெரியாத விஷயம்தான். பள்ளிகளின் மூலமாகவே ஊனமுற்றவர்களுக்கான உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தொகைதான் யானைப் பசிக்கு சொளப் பொரி என்பதைப் போல் இருக்கிறது.

ரயில் மற்றும் பேருந்து பயணங்களில் ஊனமுற்றவர்களுக்கான விசேஷ சலுகைகளை பட்டியலிட்டுள்ளார் ஆசிரியர். இதில் சறுக்குப் பாதைகள், பேட்டரி கார்கள், தனி ரயில் பெட்டிகள் என்று ஆசிரியர் சொல்லியிருப்பது சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தை மட்டும் மனதில் வைத்துச் சொல்லியிருக்கிறார் போலும்.. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இன்றுவரையிலும் சறுக்குப் பாதைகள் கிடையாது. அங்கு என்றில்லை.. தமிழகத்தில் 99 சதவிகித ரயில் நிலையங்களில் படிகளில் ஏறி இறங்கித்தான் மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதில் நடக்க முடியாதவர்களை அவரவர் தோழர்களும், உறவினர்களும் தூக்கிக் கொண்டுதான் செல்கிறார்கள்..

ஊனமுற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதையும், அதன் அமைப்புகள் மற்றும் செயல்படும் விதம், முகவரிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். ஊனமுற்றோருக்கு அன்பும், அரவணைப்பும் தாண்டி மிகவும் தேவைப்படுவது அவர்களது ஊனத்தை மறக்கடிக்க நினைக்கும் அளவுக்கான உபகரணங்கள்.

வெளிநாடுகளில் எத்தனை விதமான ஊனம் இருக்கிறதோ அதற்கேற்றாற்போல் வித, விதமான உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் அது நமது நாட்டில் மிகப் பெரிய பணக்கார வீடுகளில் மட்டுமே தெரிந்தவைகளாக உள்ளன. இன்னமும்கூட செயற்கைக் கால்கள் கிடைக்காமல் கட்டையை இருபுறமும் ஊன்றிக் கொண்டு நடக்கும் ஊனமுற்றவர்களை நாம் நிறைய பார்க்கலாம்.

ஊனமுற்றவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளையும் பட்டியலிட்டுள்ளார் ஆசிரியர். சென்னையைச் சுற்றியே 29 பள்ளிகள் உள்ளன என்பது எனக்கு ஆச்சரியமான விஷயம். மாவட்டந்தோறும், நகரந்தோறும் இருக்கும் இது போன்ற பள்ளிகளை பட்டியலிட்டுள்ளது பலருக்கும் நிச்சயம் பயன் தரும்.

ஊனமுற்றோருக்கான அரசாங்கச் சலுகைகள் என்னென்ன..? சலுகைகளைப் பெற என்ன செய்ய வேண்டும்..? எங்கு தொடர்பு கொள்வது..? சிறப்பு வேலை வாய்ப்புப் பயிற்சிகள் என்னென்ன..? இலவச உபகரணங்களைப் பெற என்ன வழி..? அரசின் ஊனமுற்றோருக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் என்னென்ன? என்பது பற்றியெல்லாம் மிக எளியத் தமிழில் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியிருக்கும் ஆசிரியர், அரசின் இந்தச் சலுகைகளைப் பெற வேண்டுமெனில் மிக முக்கியத் தேவையான ‘ஊனமுற்றோர்’ என்பதற்கான அடையாள அட்டை பெறும் வழியையும் அடையாளம் காட்டியிருக்கிறார்.

மாவட்ட மறுவாழ்வு மையங்களின் முக்கியப் பணியே உடல் ஊனமுற்றவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி அவர்களைப் பற்றிய கணக்கெடுத்தலும், அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குதலும்தான். அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக விண்ணப்பித்து இந்த அடையாள அட்டையைப் பெறும்படி அறிவுறுத்துகிறார் ஆசிரியர். 

இந்த மாதம் நான் செய்ய வேண்டிய தலையாய பணி எனக்கும் ஒரு அடையாள அட்டை பெறுதல்தான். இந்தப் புத்தகத்தின் மூலம் எனக்குக் கிடைத்துள்ள ஒரு நன்மை என்று இதனை எடுத்துக் கொள்கிறேன்..

என் போன்ற காது கேளாத குறைபாடு உடையவர்களுக்காக காது கேட்கும் கருவிகள் எங்கெங்கு கிடைக்கும் என்று ஒட்டு மொத்தமாகப் பட்டியலிட்டுள்ளார். புத்தகத்தை படித்து முடித்தவுடன் செய்த முதல் வேலை அந்தந்த கடைகளுக்கு போன் செய்து காதுக்கு பின்புறம் மாட்டக்கூடிய இலகுவான காது கேட்கும் கருவியின் விலையை கேட்டுத் தெரிந்து கொண்டதுதான். அது கொஞ்சம் காஸ்ட்லிதான்.. குறைந்தபட்சம் 8 ஆயிரம் ரூபாயில் இருக்கிறது. அப்பன் முருகன் அருளால் பணம் சேர்ந்தவுடன் அதைத்தான் முதலில் வாங்க உள்ளேன்.

இப்போது உள்ளது கொஞ்சம் சிரமத்தைத் தருகிறது. ரெடிமேட் சட்டைகளை வாங்கினால் அதில் உள்பாக்கெட்டை அவசியம் தைக்க வேண்டி உள்ளது. மேலும் அடிக்கடி கை அனிச்சை செயலாக அந்த வயரை இழுத்துவிட்டுக் கொண்டே இருக்கிறது. கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் கை, காலை எடுக்காமல் காதை மட்டுமே எடுத்தானே முருகன் என்ற நினைப்பில் நமக்கு பரவாயில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. 

இந்த குறைபாட்டால் எனக்குள்ள ஒரு குறை எனக்கு மிகவும் பிடித்தமான டீஷர்ட்டுகளை போடவே முடியவில்லை என்பதுதான். அவற்றுக்கு உள் பாக்கெட் தைப்பது மிகவும் கடினம் என்கிறார்கள் தையற்காரர்கள். மேலும் அது அதிக வெயிட்டை காட்டி தொந்தரவளிக்கிறது.. போகிறது.. அடுத்தப் பிறவியில் அனுபவித்துக் கொள்ளலாம்.

மிகக் குறைந்த வெறும் 60 ரூபாய் விலையுள்ள இப்புத்தகத்தை யாரேனும் உடல் ஊனமுற்றவர்களுக்காக நீங்கள் வாங்கிக் கொடுத்தீர்களானால், அது விலை மதிப்பில்லாத ஒரு வாழ்க்கையை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த அரியப் பணிக்காக ஆசிரியர் டாக்டர் சு.முத்துசெல்லக்குமாரும், இப்புத்தகத்தை வெளியிட்டுள்ள கிழக்குப் பதிப்பகமும் என்றென்றும் என் 
நன்றிக்குரியது.

.

மீன் எண்ணெய்

இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.

எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்பு ் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலி ளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.

இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.

மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.

உணவுஒவாமை



காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 20  மாணவிகள் காலை உணவுவ் ஒவாமையினால் திடீரென்று சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திடீரென சுகவீனமடைந்த மாணவிகள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக அவ்வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் எம்.ஆதில் தெரிவித்தார்.

இம்மாணவிகளில் 5 பேருக்கு  மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர் கூறினார்.காத்தான்குடி ஸித்தீக்கியா மகளிர் அரபுக் கல்லூரியைச் சேர்ந்த இம்மாணவிகள், இன்றையதினம் காலை ஸித்தீக்கியா அரபுக் கல்லூரியிலிருந்து காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்திற்கு வந்து கல்வி கற்றுக்கொண்டிருந்தபோதே திடீர் சுகவீனமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஏ.எல்.எம்.றஹ்மான் தலைமையில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் யு.எல்.நசிர்தீன் உட்பட பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினர் வைத்தியசாலைக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன வைத்தியசாலைக்கு வந்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

நன்றி உண்மைகள்

onsdag 6. februar 2013

உலகின் 8 வது அதிசயம்: சிகிரியா



உலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’ தொழில் நுட்பத்தை ஒத்த கலைப்படைப்பு வரலாற்றுப் புகழ்மிக்கதும், உலகின் எட்டாவது அதிசயம் எனக் கருதப்படுவதுமான சிகிரியா, நட்சத்திரங்கள் நிலை கொண்டுள்ள அமைப்பை அனுசரித்து (location of stars) நிர்மாணிக் கப்பட்டிருப்பதாகவும் எகிப்து நாட்டின் “பிரமிட்” கோபுர தொழில் நுட்ப அமைப்பை ஒத்ததாக சிகிரியா அமைந்துள்ளமை இதன் மூலம் புலனாவதாகவும் இங்கிலாந்து பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் நட்சத்திர உயிரியல் விஞ்ஞானக் கல்விப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்த்ரா விக்ரமசிங்ஹ தெரிவித்தார். அண்மையில் பொலன்னறுவை - அரலகங்வில பிரதேச வயல் வெளியொன்றில் விழுந்ததாகக் கூறப்படும் எரி நட்சத்திரச் சிதைவுகளை பரிசோதனைக் குட்படுத்தும் நோக்கில் அப்பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த பேராசிரியர் சந்த்ரா விக்ரமசிங்ஹ 31 ஆம் திகதி சீகிரியாவில் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீகிரியாவுக்கு தான் பல தடவைகள் சென்றிருப்பதாகத் தெரிவித்த பேராசிரியர், எகிப்து நாட்டின் பிரமாண்டமான பிரமிட் கோபுரங்களைப் போன்றே, இலங்கையில் சீகிரியா குன்றமும் நட்சத்திர அறிவியல் தொடர்பான அறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதாகவும், வடகிழக்குத் திசையை நோக்கி சிகிரியா அமைக்கப்பட்டிருப்பதானது, நட்சத்திர அமைப்பினை அனுசரித்தே என்பது இதன் மூலம் நிரூபணமாவதாகவும், இது உள்ளத்தை ஈர்ப்பதான ஓர் விடயமெனவும் தெரிவித்தார்.

இவ் ஆய்வுச் சுற்றுலாக் குழுவில் இங்கிலாந்து பக்கிங்ஹாம் பல்கலைக்கழக, நட்சத்திர உயிரியல் விஞ்ஞானக் கல்விப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்த்ரா விக்ரமசிங்ஹவின் தலைமையில் அமெரிக்கா - நாஸா ஆய்வு நிலையத்தின் முன்னாள் நட்சத்திர உயிரியல் விஞ்ஞானி சியலும் பொலிஸ், மற்றும் பக்கிங்ஹாம் பல்கலைக்கழக நீரியல் வளத்துறை சார்ந்த விஞ்ஞானி பேராசிரியர் ரிச்சர்ட் பீ. ஹுவர், ஜப்பான் நாட்டின் நட்சத்திர ஆய்வு நிபுணர் பேராசிரியர் நூரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இதேவேளை கடந்த காலங்களில் நாட்டில் சில இடங்களில் பெய்ததாகக் கூறப்படும் சிவப்பு, மற்றும் மஞ்சள் நிற மழை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு இவ் ஆய்வுக் குழுவினர், சிகிரியா குன்றத்தின் உச்சியிலமைந்துள்ள நீர்த் தடாகத்திலிருந்து பரிசோதனைக்கென மாதிரி நீரையும் தம்முடன் எடுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி-தினகரன்

mandag 4. februar 2013

மட்டகளப்பில் அபிவிருத்தி

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 37741 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் மற்றும் வாழ்வாதார திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் 1679 மில்லியன் ரூபா மாவட்ட செயலகம் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அமைச்சுக்கள் மூலமாக 36062 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஊடாக 8000 மில்லியன் ரூபாவும், வீதி அபிவிருத்தி அமைச்சு ஊடாக 4000 மில்லியன் ரூபாவும், மின்சார எரிபொருள் துறை அமைச்சு ஊடாக 120 மில்லியன் ரூபாவும், நீர் வழங்கள் வடிகால் அமைப்பு அமைச்சு ஊடாக 11000 மில்லியன் ரூபாவும்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார்.

வாழ்வாதாரம், நீர்ப்பாசனம், கல்லடிப்பாலம், மண்முனைத்துறைப் பாலம், சுற்றாடல் அபிவிருத்தி, நீதி மன்ற அபிவிருத்தி, வாழ்வாதார மேம்பாடு உட்பட பல்வேறு துறைகளும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி - உண்மைகள்

tirsdag 29. januar 2013

ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமாகுமா?


வெள்ளையர்கள் இருக்கும் போதே விதைக்கப்பட்ட இன வேற்றுமை , சமூக ஏற்றத்தாழ்வுகளின் விதைகள் அவர்கள் வெளியேறியதன் பின்னர் அவர்களே எதிர்பார்க்காத அறுவடையைத் தந்தது இலங்கையின் கடந்த கால வரலாறு.

இந்த வரலாற்றின் ஏக போக விளைச்சலை இனப் பிரச்சினை எனும் பூதம் ஆட்கொண்டதால் எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியாமல் நாட்டை விட்டு தூர ஓடியர்வர்கள் பல லட்சக் கணக்கில் இருக்கிறார்கள்.

இப்போது இனப் பிரச்சினை எனும் பெயரால் இடம்பெற்ற போர் ஓய்ந்துவிட்டது, இனியாவது ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமா

நன்றி-அறிவுடன்

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – அமெரிக்கா அறிவிப்பு




போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – அமெரிக்கா அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 28 சனவரி 2013, 16:04 GMT ] [ கார்வண்ணன் ]
போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஜேம்ஸ் மூர், கொழும்பில் சற்று முன்னர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 

போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காப் படைகளை விசாரிப்பதற்கான வாக்குறுதியை வழங்குவதற்கு, சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே, ஜெனிவாவில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. 

"கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட பின்னர், சிறிலங்கா சிறியளவிலான முன்னேற்றத்தையே காண்பித்துள்ளது. 

ஆனால், இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்று வொசிங்டன் நம்புகிறது. 

தமது சொந்த மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அதன் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் அமெரிக்காவும், ஏனைய 23 நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 

மார்ச் மாதம் கொண்டு வரப்படும் புதிய தீர்மானம், சிறிலங்கா மக்கள் மீதுள்ள அமெரிக்காவின் பொறுப்பின் வெளிப்பாடு. 

சிறிலங்காவுக்கு எதிரான இந்தத் தீர்மானத்துக்கு அமெரிக்கா அனுசரணை வழங்கும். 

பொறுப்புக்கூறலை கொழும்பு உறுதி செய்தாக வேண்டும்” என்றும் அவர் மேலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, இங்கு கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் விக்ரம் சிங், சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவைப் பதவி நீக்கியதும், அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார். 

“ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம், சிறிலங்கா விவகாரத்தை அமெரிக்கா புதுப்பித்துக் கொள்ளவுள்ளது.
நன்றி புதினப்ப்லகை 8097320905256355958#editor/target=post;postID=8573091797165977412

வெள்ள அழிவு



வெள்ளத்தினால் ஏற்ப்பட்ட அழிவு



அறுவடைக்குத்தயாராகவிருந்த ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின
Published on January 26, 2013-2:48 pm   ·   No Comments
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பெய்த அடை மழையை யடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் அறுவடைக்குத்தயாராக விருந்த ஆயிரக்கணக்கான வயல்நிலங்கள் மூழ்கியுள்ளன. இ

lørdag 26. januar 2013

ஜெனிவா மகாநாடு



இலங்கைக்க எதிராக அமெரிக்கா பாயும்?; ஜெனிவா மாநாட்டில் பிரேரணை வரும்

இராஜதந்திர முன்னேற்பாடுகளை இப்போதே அமெரிக்கா முடுக்கிவிட்டிருப்பதாக அறியமுடிகின்றது. ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான மிக முக்கிய தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா உத்தேசித்துள்ளது. 

இதற்கான இராஜதந்திர முன்னேற்பாடுகளை இப்போதே அமெரிக்கா முடுக்கிவிட்டிருப்பதாக அறியமுடிகின்றது.

இதன்படி மார்ச் மாத கூட்டத்தொடரில் பங்கேற்கும் நாடுகளின் தூதுவர்களுக்கு இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கை தொடர்பில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்திவருவதாகவும், மார்ச் மாத மாநாட்டில் அது தொடர்பில் பிரேரணையொன்று கொண்டுவரப்படும் சாத்தியம் தொடர்பிலும் ஜெனிவாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இராஜதந்திர மட்டத்தில் முன்னறிவித்தலை கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தொடர்பில் இந்த முறை ஜெனிவா மாநாட்டில் மூன்று நாள்கள் தனித்தனி அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இறுதி நாள் விவாதம் மார்ச் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆகையால் மார்ச் 15ஆம் திகதியளவிலேயே அமெரிக்கா தனது பிரேரணையை முன்மொழியுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

அதன்போது சமர்ப்பிக்கப்படவுள்ள அமெரிக்காவின் பிரேரணைக்கு தற்போது இறுதி வடிவம்கொடுக்கும் முயற்சிகள் முடிவடைந்து விட்டதாக அமெரிக்க இராஜதந்திர உயர்மட்ட வட்டாரங்கள் நேற்று "உதயனி'டம் உறுதிப்படுத்தின.

fredag 25. januar 2013

மட்டகளப்பில் மாற்றம் காணும் விவசாயம்




மட்டக்களப்பின் முதுகெலும்பு என்பதனை விட அதன் இருதயமாக இருப்பது அந்த மாவட்டத்தினை வளப்படுத்தும் மண்ணும் மனிதர்களும்தான். ஒரு பிரதேசம் வளர்ச்சி பெற வளங்கள் தேவை என்பது அபிவிருத்தியாளர்களது சிந்தனையாக இருந்து வந்தது. அது மனித வளம் மற்றும் பௌதிக வளம் என்ற இரண்டையும் குறிக்கும். ஆனால் இவற்றில் பௌதிக வளம் இல்லாமலேயே, மனித வளத்தினை மாத்திரம் உரமாக்கி அபிவிருத்தி கண்ட யப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் எம்முன் உதாரணமாக இருக்கும் போது, எல்லா வளமும் கொண்ட எமது மட்டக்களப்பு மாவட்டம் இன்னும் இன்னும் வறுமையில் தவிக்கும் மாவட்டமாக இருப்பது ஒன்றும் புரியாத புதிர் இல்லை.
விவசாயம் இவர்களின் இரத்தத்தில் மாத்திரமல்ல இந்த மண்னோடும் இரண்டறக் கலந்து மணக்கும் தொழில். இருந்தும் வினைத்திறனான ஆளணி இல்லாமை அதன் பசுமைப் புரட்ச்சிக்கு அணிசேர்த்து இருக்கவில்லை அதனால்தான் இன்று போட்டிபோட முடியாத முடங்கிய இலாபமற்ற விருப்பமில்லாத புரட்சியில்லாத துறையாக தள்ளப்பட்டுள்ளது. இந்த ஒரு இக்கட்டான நிலையில்தான் உழுது பண்படுத்தும் விவசாயிகளை பழுதுபடாமல் எடுத்தேத்தும் எமது மாவட்டத்தின் கமநல அபிவிருத்தி திணைக்களத்துக்கான புதிய உதவி ஆணையாளராக திரு நடராசா. சிவலிங்கம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 
இவர் பல திட்டங்களில் பணிபுரிந்திருந்தாலும் குறிப்பாக இவர் சுமார் 9 வருடங்கள் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தில் வடக்கிலும், கிழக்கிலும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து, பசுமைப்புரட்சியை ஏற்ப்படுத்தி பேர் பெற்ற ஒரு அனுபவ சாலியாக இருக்கிறார். அத்துடன் உன்மையான விவசாயிகளின் நிலையை நாடி பிடித்து உதவும் தன்மை கொண்ட ஒரு உத்தியோகஸ்த்தர் என்பது இந்த மாவட்டத்தின் ஏக்கத்தினை பூர்த்திசெய்ய போதுமானதாக இருக்கிறது. இவர் முல்லைத்தீவு,  மன்னார்,  மற்றும் அம்பாரை போன்ற இடங்களில் அனர்த்தம், யுத்தம் போன்ற இக்கட்டான காலங்களிலும் 2004 ஆம் ஆண்டில் இருந்து பணி புரிந்து அந்த விவசாய பெருங்குடி மக்களின் நன்மதிப்பினை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இவர் காரைதீவு கிராமத்தில் ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்து, வறுமை குடும்பத்தினை வாட்டியபோதும்,  பெருமை சேர்க்க பொறியியலாளர் பட்டத்தினை பேராதனை பல்கலைக்களகத்தில் முடித்து, அதன் பிறகு தனது பொறியியல் முதுமானியினை மொறட்டுவ பல்கலைக்கழகத்திலும், பொருளாதார அபிவிருத்தி முதுமானியினை கிழக்கு பல்கலைக்கழகத்திலும் முடித்து துறை தேர்ந்த கல்வியினை தன்வசம் கொண்டுள்ள ஒரு பொருத்தமான உத்தியோகத்தராக இருக்கிறார், என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
 புதிதாக 07.01.2013 அன்று பதவி ஏற்றிருக்கும் மாவட்ட விவசாய அவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் அவர்கள் விவசாய பெருங்குடி மக்களின் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் காலடி எடுத்து வைத்திருப்பது ஒரு சாவாலாகவும் அதே நேரம் மக்களை மாற்றுவதற்க்கான சந்தர்ப்பமாகவும் பயன்படுதுவார் என்பது உறுதி.

நன்றி உண்மைகள்

படுவான்கரை



போரின் சகல அடிகளையும் மௌனமாகத் தாங்கி தாம் அழிவுற்ற கதைகளை வெளிச்சொல்ல வழியேதுமற்று புதைந்து கிடந்த படுவான்கரைப் பிரதேச மக்களினதும், விடுதலைப்போரில் இணைந்து போராடி இன்று எல்லோராலும் கைவிடப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளினதும் கதைகளை இந்நுால் பேசுகிறது. பலநுாறு கேள்விகளை  எழுப்பி, குற்ற உணர்ச்சியை நம்மில் பரவவிடும் மௌனத்தின் குரல்களாக இக்கதைகள் விரிகின்றன.
இலங்கையில் மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் கடந்த பல வருடங்களாக நோர்வேயில் வசித்து வருகின்றார். நோர்வே வெளிநாட்டவர் திணைக்களத்தில் கணனித்துறை ஆலோசகராகப் பணியாற்றும் இவர் எழுத்து, இலக்கியம், சமூகம், பயணங்கள், புகைப்படக்கலை என்பனவற்றில் ஈடுபாடும் செயற்பாடும் உள்ளவர்.
நன்றி உண்மைகள்

படகுச்சேவை



படுவான்கரைக்கும் மண்முனைக்கு இடையிலான வாவியில் நேற்று புதன்கிழமை காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகு பழுதடைந்துள்ளது. இதனால் வாவியின் நடுவில் தத்தளித்த நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள், இராணும் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மண்முணைத்துறையை வந்தடைந்துள்ளனர். படகு பழுதடைந்தமையினால் 15 நிமிடங்கள் பயணிக்கும் இந்த வாவியில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் பயணிகள் இருந்துள்ளனர்.இந்த படகு இயந்திரம் அடிக்கடி பழுதடைவதனால் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை இந்த படகில் பணிப்பதற்காக இரண்டு துறையிலும் பெருமளவிளான பொதுமக்கள் பல மணி நேரம் காத்துநின்றனர். இந்த இடத்திற்கு வருகை தந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.மஹிந்தன் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டார்.இந்த படகு சேவை வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

torsdag 24. januar 2013

மீன்மகள் ஏங்குகின்றாள் வாவிமகள் வாடுகின்றாள்…..!!! – படுவான்கரையான்.



 “ஆரியர்போற்றும் அணிசால் இலங்கையிலே
சீரார் குணதிசையைச் சேர்ந்த வளர்புகழும்
ஏரால் இயன்றசெந்நெல் இன்சுவைதீங் கன்னலொடு
தெங்கி னிளநீரும் தீம்பலவி னள்ளமிர்தும்
ஏங்குங் குறையா இயலுடைய நன்னாடு
மட்டக் களப்பென்னும் மாநாடு……..”

என்று புகழ்ந்து பாடப்பட்ட மட்டக்களப்பு தமிழகம் திருக்கோணமலை மாவட்டத்தின் எல்லையாக மகாவலிகங்கை பாய்ந்து செல்கின்றது. வெருகல் கங்கையிலிருந்து தெற்காக சுமார் நூற்றுஐம்பது மைல் நீளமாக குமுக்கன் ஆறுவரையும் வங்காளக்கடலையும் கிழக்கு மேற்காக நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி ஆகிய நான்கு வகையான நிலங்களையும் தன்னகத்தே கொண்டு எழில்மிக்க செல்வச்சிறப்புமிக்க நாடாக விளங்குகின்றது. மட்டக்களப்புமாநிலத்தினை மடடக்களப்புவாவிமகள் எழுவான்கரை படுவான்கரை எனஇரண்டாகப்பிரித்து எழில்கொஞ்சும் இளவேனிற் காலநிலையயை தினமும் காலை மாலை காட்சிகளாக இங்குவாழும் மக்களுக்கு அள்ளிக் கொடுத்து இன்புற்றிருக்கின்றாள். பஞ்சம் பட்டினி அறியாது நெல்லுக்கோ மீனுக்கோ தேனுக்கோ தினைக்கோ யாரையும் நம்பியிராது தங்கள் மண்ணிலே உழுதுண்டு வாழும் உயர்ந்த மக்கள்தான் கிழக்கில் பிறந்தமக்கள்.

இலங்கையில் கடந்த 30வருடங்களாக இடம்பெறும் காலமாற்றம் அரசியல் மாற்றம் என்பனவற்றிற்கு கிழக்குமாகாணமும் தப்பிவிடவில்லை. விடுதலைப்போராட்டமாக உருவெடுத்து பல மாறாத கொடுமைகளையும் சூறாவழியாகவந்து ஆறாத வடுக்களையும் சுனாமிப்பேரலையாகித் தேறாத சுமையையும் நம்மக்களுக்கு தந்து சென்ற நிலையிலே இன்றுஅகதியாக ஆதரவற்று அல்லோலகல்லோலப்படும் நம்இரத்தங்களின் நிலைகண்டு நாம்வாழாதிருப்பது கொடுமையிலும் கொடுமை.

எவ்வளவுதான் கொடுமைகளும் சோதனைகளும் அழிவுகளும் வந்தாலும் 95 வீதமான கிழக்குமக்கள் இன்றும் தங்கள் மண்ணைவிட்டகலாத மண்ணின் மைந்தர்களாக அங்கிருந்து எந்தக் கொடுமைகளையும் எதிர்த்து நின்று போராடி வாழ்வதை நினைக்கும்போது அவர்ளை நாம் என்னவென்ற போற்றுவது. தமிழ்நாட்டிற்கோ ஐறோப்பாவிற்கோ ஓடும் அளவிற்கு அவர்களது மண்பற்று இன்னமும் விட்டுப்போகவில்லை.

கடந்தவருடம் ஆகஸ்டில் சம்பூரில் தொடங்கிய இடப்பெயர்வுகள் படுவான்கரை வரை கிழக்குமக்களின் வாழ்வில் பெரும்பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. வன்னிப்புலிகளிற்கும் இராணுவத்தினருக்கு மிடையிலான பலப்பரீட்சையில் தங்கள் குடும்பத்துடன் சுதந்திரமாக வாழும்சூழல் இன்றி தவிக்கும் பல்லாயிரம் மக்களுக்கு ஆறுதல்கூற யாரும் அற்றநிலையை எண்ணி மட்டக்களப்பு வாவிமகள் கண்ணீர்வடிக்கின்றாள். ஆனந்தவெள்ளத்தில் அள்ளிவிளையாடிய வாவிமகள் ஆதரவற்று அகதிகளாக ஓடிவரும் படுவான்கரைமக்களின் கண்ணீரால் பெருக்கெடுக்கின்றாள்.

வந்தாரைவாழவைத்து அவர்கள் வாழ்வதறகு இடம்கொடுத்து தங்கள் வளத்தைக் கூடஅபகரித்து சென்றவர்களையும் மன்னித்து விருந்தோம்பலில் சிறந்துவிளங்கிய கிழக்குமக்களின் அவலம் இன்று ஐக்கியநாடுகள் சபை வரை போய்விட்டது. புலம்பெயர் தமிழர்கள் வாகரை இடம்பெயர்வில் தொடங்கி இன்றுவரை நடைபெற்றுவரும் இந்த அவலமானநிலைக்கு ஆறுதல் அளிக்க முன்வராதது அவர்களின் நாட்டுப்பற்றையும் தேசிய, பிரதேசப்பற்றையும் கேள்விக்குறியாக்கி நிற்கின்றது.

காலம்காலமாக ஒருதாய் பிள்ளகைளாக தமிழர்களோடு முஸ்லீம்களும் சிங்களவரும் ஒன்றாகவாழ்ந்த நாடு மட்டக்களப்புநாடு. இடையிடையே பல துவே~ அரசியல்வாதிகளாலும் தமிழத்தேசியம் என்றபுல்லுருவிகளாலும் அவ்வினங்களுக்கான உறவுமுறையினை பகடைக்காயக்கி பந்தாடிய காலமும் உண்டு. இருந்த போதும் சூறாவளியின் போதும் சுனாமியன் போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிக்கப்படாத பகுதிகளில் வாழ்ந்த ஏனைய மக்கள் இனமத பாகுபாடின்றி உணவு உடைகளை வழங்கியதுடன் அவர்களின் துன்பத்திலும் பங்குகொண்ட உண்மைச் சம்பங்கள் நாம் அறிந்ததே. இன்று படுவான்கரைமக்களின் இடப்பெயர்வால் காத்தான்குடி வாழ்முஸ்லீம்மக்கள் செய்யும் சேவைகள் இலங்கைத் தமிழர்களைமட்டுமன்றி குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை முக்காடு போடவைத்துள்ளது.

காத்தான்குடியிலே வெள்ளிக்கிழமையன்று இறைவனை வணங்கிய அப்பாவிமுஸ்லீம்களை ஈவிரக்கமின்றி பள்ளிவாசலில்வைத்து சுட்டுத்தள்ளிய அரக்கர்களாலே கடந்த கால்நூற்றாண்டாக இன்னல்பட்டு வாழ்ந்த மக்கள் இன்று தங்கள் சொத்திழந்து சுகமிழந்து உடுக்க ஆடையின்றி இருக்க வீடின்றி தவிக்கும் போது அவர்களுக்கு ஆதரவளித்து உணவுபரிமாறும் முஸ்லிம்களக்கு மட்டக்களப்புமக்கள் என்றென்றும் நன்றிக்கடமைப் பட்டவர்களாவர்.

புலம் பெயர்ந்து வாழும் கிழக்குமக்களே! காலம் கடந்துவிடவில்லை நம்மக்களுக்கு நாம்செய்யவேண்டிய கடமை இன்றுஎமக்குள்ளது. அவசர உதவிகளைக் கூடசெய்யமுடியாத நிலையில் அங்குள்ள தொண்டர் நிறுவனங்கள் பலசிக்கல்களுக்குள்ளாகியள்ளனர் அரசாங்கமும் அடிப்படைத்தேவைகளை தாமதமின்றி வழங்குவதாக தெரியவில்லை. அகதிளாக தஞ்சமடைந்து மட்டக்களப்பு ரவுணுக்கு வந்துள்ள படுவான்கரை மக்களின் மனிதப்பேரவலத்தை தடுக்கும்வகையில் இருப்பிடவசதி உணவுவசதி சுகாதாரவசதிகளுக்காகவும் தாமதமின்றி உதவிசெய்யுங்கள். காத்தான்குடி மக்கள் வீட்டிற்கு நூறு ரூபாய் கொடுக்கும் போது நீங்கள் 100 யூரோக்கள் அல்லது 100 டொலர்களை கொடுப்பதற்கு ஏன்தயங்குகின்றீர்கள்? இங்குவாழும் உங்கள் உறவினர் மூலமாக நீங்கள் தனித்தனியாக இந்த உதவியைச் செய்யலாம். சுமார் 15000 குடும்பங்களைச் சேர்ந்த 120000 பேர் தற்போது களுவான்சிக்குடி முதல் வாழைச்சேனை வரை அகதிகளாகவுள்ளனர்;. கிழக்கிலிருந்து சுமார் 75000 உறவுகள் ஐறோப்பா அவுஸ்திரேலியா கனடா அமெரிக்காவென புலம்பெயர்ந்து வாழுகின்றார்கள். கூட்டிப் பெருக்கி பார்த்தீர்களென்றால் அங்குள்ள மக்களின் தற்போதய தேவைகளை வேறுஎந்த உதவியுமின்றி உங்களால் மட்டும் தனியாகசமாளிக்க முடியும். தற்போது நம்இரத்த உறவுகள் அல்லல்பட்டு அவதியுறும்போது உதவாத கிழக்குமாகாணத்தான் மீண்டும் அங்கு சென்று அம்மண்ணின் தண்ணீர் குடிப்பதற்கு அருகதையற்றவர்கள். தற்போது கணக்கு உங்களுக்கு விளங்கியிருக்கும் செய்யவேண்டியவர்கள் நீங்கள்தான்.

søndag 20. januar 2013

கிழக்கு மாகாணப் புகையிரத சேவைகள்



கிழக்கு மாகாணப் புகையிரத சேவைகள் சிறப்பான முறையில் இல்லை என்றுதான் அறிய முடிகிறது. காலதாமதம், மற்றும் பழமையான இருக்கைகள்,  தண்டவாளங்கள் நன்றாகச் சீர் செய்யப்படாமை போன்ற பல குறைபாடுகள் காணப்படுவதாக அறியமுடிகிறது.

lørdag 19. januar 2013

வெள்ளத்தினால் மட்டு. மாவட்டத்தில் 142,674 பேர் பாதிப்பு

மட்டக்களப்பு வெள்ளம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக பெய்த அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 38,177 குடும்பங்களை சேர்ந்த 142,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் கே.விமலநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்  இந்த குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று மட்டக்களப்ப மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 6,098 குடும்பங்களை சேர்ந்த 19,868 பேர் இடம்பெயர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நன்றி - உண்மைகள்

மட்டக்களப்பில் புதிய எல்லை நிர்ணயங்களால் சர்ச்சை

பிரதேசசெயலகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவுகளின் எல்லைகள் மீளாய்வு செய்யப்பட்டு, மீள வரையறை செய்யப்படுகின்ற நடவடிக்கை அப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக மாவட்டத்திலுள்ள சில தமிழ்ப் பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் அந்த ஹர்த்தால் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசங்களில் கவனஈர்ப்பு போராட்டங்கள் நடந்துள்ளன.
கடந்த வாரம் மட்டக்களப்புக்கு சென்றிருந்த பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் துனை செயலாளரொருவர் சிவில் அதிகாரிகளுடன் கூடி ஆராய்ந்து பிரதேசய செயலக எல்லைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுத்துள்ளார்.
அந்தத் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்பொருட்டே தமிழ்ப் பிரதேசங்கள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஹர்த்தாலும் கவன ஈர்ப்பும்
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தேச தீர்மானத்தின்படி தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலக நிர்வாகங்களிலுள்ள சில தமிழ் கிராமங்களை உள்ளடக்கிய காணிகள் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கோரளை மத்தி மற்றும் ஒட்டமாவடி பிரதேச செயலகங்களுடன் இணைக்கப்படுகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு நகர், செங்கலடி மற்றும் ஆரையம்பதி உட்பட சில தமிழ் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக அந்த பிரதேசங்களில் வழமை நிலை பாதிக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியம் என்ற பெயரில் துண்டுப் பிரசுரங்கள் மூலம் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, தமிழ் பிரதேசங்களில அழைப்பு விடுக்கப்பட ஹர்த்தாலுக்கு கல்குடா தொகுதி முஸ்லிமகளின் எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் வழமைக்கு மாறாக இன்று வெள்ளிக்கிழமை ஒட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச முஸ்லிம்கள் தமது வியாபார நிலையங்களை திறந்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்குடா உலமா சபையினால் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
உத்தேச தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி இன்று வெள்ளிக்கிழமை ஒட்டமாவடி பிரதேச முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் ஐும்மா தொழுகையின் பின் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
உத்தேச எல்லை நிர்ணயத்துக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான வாசகங்களையும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தார்கள்.
இதேவேளை இந்த விவகாரத்தில் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வொன்றை காண்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அமைச்சர் ஜோன் செனவிரட்னவின் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - உண்மைகள்

fredag 18. januar 2013

மட்டகளப்பு கல்லடி பாலம்



மட்டகளப்பு கல்லடிப் பாலம் மிகவும் பழமை வாய்ந்தது இப்பாலத்தால் நகரம் சிறப்பாக காணப்படுகிறது.

கிழக்குமாகாணம்

.
வ்
கிழக்குமாகாணம் அம்பாறை,மட்டக்களப்பு, திருகோணமலை இன முன்று மாவட்டங்களைஉள்ளடக்கயுள்ளது.இவற்றுள் நகரங்களும் கிராமங்களும் அடங்க்கும்.முன்று மொழிபேசும் மக்களும் இங்குள்ளனர் அரசியல் பின்னணியில் இம்மாவட்டங்களின் முன்னேற்றம் குறைந்தும் கூடியும் உள்ளதை காணலாம்

மட்டகளப்பு கரையோரக்கிராமங்கள்


மட்டகளப்பு கரையோரங்களில் வாழும் மக்களின் அன்றாட சீவியம்  மீன்பிடித்தொழிலின்   மூலம் கிடைக்கும் வருமனத்தாலே தான் கழிகின்றது. கடலில் கொந்தளிப்போ,மற்றும்  மழை, புயல் போன்ற இயற்கை அனத்தன்கள் அவர்கள் வாழ்வை சீரழிக்கின்றன. இதனால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுகின்றனர் இதை அரசாங்கமோ வசதி படைத்த மக்களோ கண்டுகொள்வதில்லை.

மட்டகளப்பு மாவட்டம்



மட்டகளப்பு மாவட்டம் இயற்கையின் பாதிப்பினால் பெரும் அழிவுகளை சந்தித்துள்ளது இம்மாவட்டத்தின் சிறு கிராமங்களான ஊறணி மற்றும் கல்லாறு,கல்முனை பிரதேசங்கள் மழையினாலும்,அதனால் ஏற்ப்பட்ட வெள்ளத்தினாலும் மிகவும் பாதிப்படைந்துள்ளது.

கிழக்கு மாகணத்தின் பூர்வீகம்


இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் ஒன்றான கிழக்கு மாகாணமானது 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தினால் உருவாக்கப்பட்டதாகும். ஆரம்பத்தில் இது வடக்கு மாகாணத்துடன் இணைக்கப்பட்ட ஒன்றாக அமைக்கப்பட்டு வட-கிழக்கு  மாகாண சபை என அழைக்கப்பட்டாலும் பின்னர் அது தென்னிலங்கை பேரினவாத சக்திகளின் அரசியல் நிர்பந்தத்தின் விளைவாக வடக்கு வேறு கிழக்கு வேறாக பிரிக்கப்பட்டது.
ஆக இன்று கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் தனித் தனி மாகாணங்களாகும்.
அதன் பிரகாரம் கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய மாகாணமாகும்.

mandag 14. januar 2013

மட்டக்களப்பு



மட்டக்களப்பு மாவட்டம் இயற்கையின் கொடுரத்தால் பெரிய அழிவுகளைச் சந்தித்துள்ளது. மழையும் வெள்ளமும் மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.

onsdag 9. januar 2013

மட்டகளப்பு கரையோர கிராமங்கள்


மட்டகளப்பில் கரையோரங்களில் வாழும் மக்களின்  பிரதான தொழில் மீன் பிடித்தலாகும் இதனாலேதான் அன்றாட  சீவியம் நடத்துகின்றனர். கடலில்  கொந்தளிப்பு, மற்றும் மழை புயல் ஏதேனும் ஏற்ப்பட்டால் தொழில்  பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்படுகின்றனர். அவர்கள் வறுமையில் வாடும் போது அரசாங்கமோ வசதிபடைத்த மக்களோ கண்டுகொள்வதில்லை

படுவான்கரை எழுவான்கரை


மட்டுநகர் இரு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது  கதிரவன் தோன்றும்  திசை எழுவான் கரை என்றும் மறையும் திசை படுவான் கரை  என்றும் வகைப்படுதிள்ளனர்.எந்த படுவான்கரையில் வாழும் மக்கள் பெரும்பாலும் வறுமை கோட்டுக்குள் வாழ்பவராக  உள்ளனர்  கரணம்  இயற்கை அழிவுகளும்  பயங்கரவாதமுமாகும்.

மட்டின் மகிமை

மட்டகளப்பு வரைபடம்

மீன் பாடும் தேனாடாம் மட்டகளப்பு பற்றி தொடர்ந்து எழுதவென பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளம் இது.
மீன், பால், தென் என வளமுள்ள பூமியாம் எம் மட்டகளப்பு பிரதேசமானது மூவினத்தினரும் ஏறத்தாள சமமான எண்ணிக்கையில் வாழும் பல்லின பூமி அது.