fredag 25. januar 2013

படகுச்சேவை



படுவான்கரைக்கும் மண்முனைக்கு இடையிலான வாவியில் நேற்று புதன்கிழமை காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகு பழுதடைந்துள்ளது. இதனால் வாவியின் நடுவில் தத்தளித்த நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள், இராணும் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மண்முணைத்துறையை வந்தடைந்துள்ளனர். படகு பழுதடைந்தமையினால் 15 நிமிடங்கள் பயணிக்கும் இந்த வாவியில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் பயணிகள் இருந்துள்ளனர்.இந்த படகு இயந்திரம் அடிக்கடி பழுதடைவதனால் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை இந்த படகில் பணிப்பதற்காக இரண்டு துறையிலும் பெருமளவிளான பொதுமக்கள் பல மணி நேரம் காத்துநின்றனர். இந்த இடத்திற்கு வருகை தந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.மஹிந்தன் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டார்.இந்த படகு சேவை வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ingen kommentarer:

Legg inn en kommentar